தமிழகம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர கண்காணிப்பு

132views
திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர ரோந்து செய்ததில், சட்டவிரோதமாக சுய லாப நோக்கம் கருதி பல்வேறு இடங்களில் மது விற்பனைக்கு வைத்திருந்த 4 பெண்கள் உட்பட 23 நபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 2325 மது பாட்டில்கள், 650 மில்லி அளவு கொண்ட பீர் பாட்டில்கள் – 11, பணம் ரூ. 2790/- பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்த நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!