தமிழகம்

உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

82views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக குடியிருப்பில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.இது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடனடியாக மின் இனைப்பு வழங்க உத்தரவிட்டார்.இதனையடுத்து குறிஞ்சி நகரில் உள்ள 27 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.இதனை ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் சென்று துவக்கி வைத்து பழங்குடியின மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார். அதன் தொடர்ந்து குன்னூத்துப்பட்டியில் 2000 மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
பின்னர் நோட்டம்பட்டி கிராமத்தில் சுடுகாடு எரிமேடை புதிதாக கட்டப்பட்டுள்ளதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.. மேலும் இந்த சுடுகாடு பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டறிருந்தார். இதில் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!