தமிழகம்

உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவிலில் குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

80views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவில்.  இந்த கோவிலை புரணமைப்பு செய்து பெத்தனசாமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் ஆறுகால பூஜைகள் செய்து கோவிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு பூஜை செய்து வைத்தனர்.

இந்த விழாவில் பெஸ்ட் மணி கோல்டு – நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் உசிலம்பட்டி மற்றும் தேனி, போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!