தமிழகம்

வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் மருத்துவத்துறை துணை இயக்குநரிடம் மனு

55views
வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் நிர்வாகிகள் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவத்துறை துணை இயக்குநரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர்மைய பகுதியில் அமைந்துள்ள அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவர்களுடன் படுக்க அறை வசதியுடன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை துவங்கியபின் இந்த மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவும், செயல் இழந்த அவசர பிரிவு மட்டுமே உள்ளது. 2022 நிதி நிலை அறிக்கையில் ரூ197 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிப்போடு பணி நின்றுவிட்டது .1 ஆண்டாக எந்தவித பணியும் நடைபெறவில்லை, அதை விரைந்து துவங்கி செயல்பாட்டுக்கு கொண்டுவரும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!