தமிழகம்

கிசான் கிரெடிட் கார்டு குறித்து குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

44views
குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக நாரயணதேவன்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.
கிசான் கிரெடிட் கார்டு குறித்து மாணவர்கள் கூறியதாவது,”விவசாய கட்டுமான செலவுகளுக்காகவும், அனைத்து சாகுபடி மற்றும் கால்நடை பராமரிப்பு செலவுகளுக்காகவும் ரூபாய் 3 லட்சம் வரை கடன் 7 சத வட்டியில் கிடைக்கும் என்றும் ஒரு வருடத்திற்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சத சலுகையுடன் 4 சத வட்டியில் கிடைக்கும் என்று கூறினர்.
இவ்விழிப்புணர்வை கம்பம் குழு மாணவர்களான சக்திவேல், நந்த குமார், காளிராஜன், ஆல்பின் சாபு, மோகன், மூவேந்திரன், சிவனேசன், ராஜா, மணி கிருஸ்ணா, ஸ்ரீ கோகுல், விஜய் ஆனந்த் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!