தமிழகம்

தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் கீழக்கரை பகுதிகளில் ஆய்வு

149views
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னய்யன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
கீழக்கரைக்கு வருகை தந்த நகராட்சி இயக்குனருடன் மதுரை மண்டல இயக்குனர் சரவணன் மற்றும் மண்டல அதிகாரிகள், இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் கீழக்கரை நகராட்சி அலுவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.  நகர்மன்ற தலைவர் செகனாஸ் ஆபிதா, நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், நகர மன்ற தலைவர் நகர்மன்ற துணை தலைவர். நகராட்சி இயக்குனரிடம் நகருக்கு முக்கிய தேவைகளான சுகாதார துறையை மேன்படுத்தும் விதமாக தூய்மை பணிக்கென வாகனங்கள் மற்றும் J.C.P. இயந்திரம் , புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்தி தர வழியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.  இதுகுறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளரிடம் தேவையானவற்றை உடனே செய்து தரவும் முறையாக தொடர்பு கொண்டால் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!