கவிதை

திறக்காத கதவில்…

287views
வாழ்வின்
வட்டத்தை நேரம் நொடி
நொடியாய்
ஒடித்து சுழல்கிறது
தூளியில்
ஆடுகிறது குழந்தையின் உயிர்
பசியின்
விரலில் இறப்பின் கை
தெருவில்
இரண்டு பூக்கள் வாசம்
வாடி சாய்கிறது
உலகம்
பாலருந்தும்
குழந்தையின் வயதை
வறுமை
அருந்தி சுவைக்கிறது
அண்ணன்
தாயானான் தம்பி சேயானான்
மனிதம்
குருடானது
யாசகம்
வாசலில் குழந்தைகளின்
சத்தம்
திறக்காத கதவில்
எழுதியிருந்தது இறைவன் இருக்கிறான்
என்று…
கவிஞர் பாக்கி

1 Comment

Leave a Reply to Irfannani Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!