தமிழகம்

காட்பாடியில் ஆச்சரியம், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் சபாஷ்

29views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை பல மாதங்களாக இயங்கிவருகிறது.  இதனால் குடிமகன்கள் கொண்டாட்டமாக இருந்தனர்.  ஆனால் பொதுமக்கள் குறிப்பாக எதிரில் நடுநிலைப்பள்ளி, அருகே அரசினர் மேல்நிலைப்பள்ளி என இருந்தன. இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் (குடிகாரர்கள், சைடீஸ் விற்பர்கள் தவிர) பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேலூர் ஆட்சியருக்கு பல புகார்கள் அளித்தனர்.
ஆனால் எப்போதும் ஆட்சியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் ஆனால் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் அதிரடியாக வள்ளிமலை கூட்ரோடு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட்டார். அதன்படி மாலை 4.30 மணிக்கு கடை இழுத்து மூடப்பட்டது.  பொதுமக்களுக்கு ஆச்சரியம், குடிமகன்களுக்கு திண்டாட்டம் ஆகிவிட்டது.  ஏன் எனில் குடிமகன்கள் 3 கி.மீ.தூரம் உள்ள கசம் பகுதி டாஸ்மாக் கடைக்கு போகவேண்டும்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!