தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா

14views
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், பணி நிறைவு பெறும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பாராட்டு விழா, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு விருது வழங்கும் விழா, அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்கு வாழ்த்து விழா, மேலும் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த ஆசிரியர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் வினோத் சந்தர், மாவட்டச் செயலாளர் ஜி.டி. பாபு மற்றும் மாவட்டப் பொருளாளர் எஸ். குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ செய்தித் தொடர்பாளருமான கு. தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரை மற்றும் பேருரையாற்றி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சீனிவாசன், கோபிநாத், தியாகராஜன், ஆனந்த் ஆகியோர் முன்னிலையிலும், அருள்குமார், உதயகுமார், மாதேஸ்வரன், உலகநாதன், மணிவாசகம், முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றி சிறப்பித்தனர். இதன் தொடர்ச்சியாக மாநில, மாவட்ட மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பாராட்டுதலுக்குரிய அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இனிப்புகளுடன் கூடிய அறுசுவை சைவ மற்றும் அசைவ மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக மாவட்ட செய்தித் தொடர்பாளர் க. இரமேஷ் நன்றியுரையாற்றி நிறைவுபெற்றது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!