தமிழகம்

கார்த்திகை மாதம் முதல் நாள் அழகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

111views
மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். அதன் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் கார்த்திகை மாதம் முதல் நாளை ஒட்டி, ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் புனித திருத்தமாடி தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் தீர்த்தத்தை, பிடித்துக் கொண்டு வரும் வழியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை காட்சி கொடுக்கிறார் .
அவர் தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமானை ஸ்ரீதேவி பக்தர்கள் தரிசனம் செய்து தொடர்ந்து கல்யாண சுந்தரவல்லி தாயார் சக்கரத்தாழ்வார் யோகா நரசிம்மர் ஆண்டாள் தொடர்ந்து காவல் தெய்வம் விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
தொடர்ந்து, அலங்காநல்லூரில் உள்ள ஐயப்பன் கோவிலிலும் முருக பக்தர்கள் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து அதே போன்று தெப்பக்குளம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ள முருகன் கோவிலிலும் மாலை அணிந்து உள்ளனர் அழகர் கோவில் நிர்வாக அதிகாரி மு ராமசாமி ஏற்பாடு செய்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. 10,000 மேற்பட்டோர் இன்று புனித நீராடினர் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!