தமிழகம்

புளியங்குடி காவல்துறையின் அதிரடி கஞ்சா வேட்டை; 6 நபர்கள் கைது

89views
புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 6 நபர்களை புளியங்குடி காவல்துறை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தும், கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நபர்களை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காவலர்கள் அடங்கிய குழு 04.01.2023 அன்று நடத்திய அதிரடி கஞ்சா வேட்டையில் 06 நபர்களை பல்வேறு பகுதிகளில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுமார் 50,000 மதிப்பிலான 2 கிலோ கஞ்சா , 2 அரிவாள்கள், 1,41000/- ரூபாய் பணம், 5 செல்போன்கள், ஆட்டோ மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!