தமிழகம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா

43views
நவீன தமிழகத்தின் சிற்பி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் கழகத்தின் சார்பாக இருபெரும் தலைவர்களது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி. மருதாம்பாள் நாகராஜ், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!