தமிழகம்

வேலூர் அருகே யானைத் தந்தம் விற்க முயற்சி சென்னையை சேர்ந்த 2 பேர் கைது – வியாபாரி போல் நடித்த வனத்துறை

66views
வேலூர் மாவட்டம் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வனப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் வேலூர் வனத்துறையினர் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.  மேலும் வனத்துறையினர் தந்தம் வாங்கும் வியபாரிகள் போல் நடிக்க முடிவு செய்து அதன்படி வேலூர் பகுதி பான சாத்துமதுரை (காட்டு பகுதி)யில் காத்திருப்பதாகவும், யானை தந்தத்தை எடுத்து வந்தால் வாங்கிகொள்வதாக கூறினர்.  அதன் சென்னையிலிருந்து காரில் எடுத்து வந்த மர்ம நபர்கள் வேலூர் அடுத்த சாத்துமதுரையில் காருடன் வந்தபோது வனத்துறையினர் காருடன் மடக்கிபிடித்து தந்தம், கார், 2 பேரை கைது செய்தனர்.  விசாரணையில் அந்த நபர்கள் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார்(38), சதீஷ்(39) என்று தெரியவந்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!