தமிழகம்

300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

53views
ராமநாதபுரம் அருகே கடற்கரை மணலில் உலர்த்திய 300 கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் பாக் ஜல சந்தி கடலில் இன்று மதியம் ரோந்து சென்றனர். தேவிபட்டினம்- ஆற்றாங்கரை கடற்பகுதியில் ரோந்து வருவதை அறிந்த ஒரு கும்பல் தப்பி ஓடியது. கரையில் சோதனை செய்தபோது, உலர்த்திய நிலையில் இருந்த 300 கிலோ அட்டைகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.35 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!