சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காட்டாம்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, தொடங்கி வைத்து, கால்நடைப் பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியத் துறைகளின் சார்பில் மொத்தம் 96 விவசாயிகளுக்கு ரூ.12.27 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், காட்டாம்பூர் ஊராட்சி, தேவரம்பூர் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்துத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் மற்றும் கால்நடைகளை பேணிக்காத்திடும் பொருட்டும், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.