தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்; கிராம கமிட்டி நடத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலைமறியல் போராட்டம் அறிவிப்பால் அவனியாபுரத்தில் போலீசார் குவிப்பு

96views
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது தைத்திருநாள் பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடால் இரண்டு வருடங்களாக அரசு ஏற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.
இந்த நிலையில் இரு தரப்பினரை கடந்த ஒரு வாரமாக மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமரச அமைதி கூட்டமானது நடைபெற்றது.  இருதரப்பினருக்கும் சமரச உடன்பாடு ஏற்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.  இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கமிட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறி தமிழக மக்கள் முன்னற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பெயரில் அவனியாபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அளிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!