ஊழியர்களை பங்குதாரர்களாக சேர்த்தது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது – ஈஷாவின் தலைமைப் பண்பு நிகழ்ச்சியில் உஜ்ஜீவன் வங்கியின் நிறுவனர் சிறப்புரை
46
“எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்து கொண்டோம். இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது” உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் தெரிவித்தார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘மனிதன் – ஒரு வளம் அல்ல’ (Human Is Not A Resource – HINAR) என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு வர்த்தக தலைவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
At HINAR 2023, participants delve deep into 3 key areas — Talent Nurturing, Organizational Culture, and Inner Transformation — under the mentorship of industry pioneers, in the tranquil yet energizing ambience of the Isha Yoga Center. #humanisnotaresource #IshaLeadership pic.twitter.com/rLPpT6Npni
— Isha Leadership Academy (@IshaLeadership) June 9, 2023