தமிழகம்

அம்மச்சியாபுரத்தில் இந்திர விழா

79views
தேனி மாவட்டம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இந்திரவிழா நடைபெற்றது.  இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.
பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாக கொண்டாடப்படுகிறது.  விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.  இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், ஆண்டுதோறும் மதுரையிலும் கொண்டாடப்படுகிறது.  இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு விழா சிறப்பு பெற்றது.
தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர்.  விழா, இருபத்தெட்டு நாள் ‘நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என’க் குறிப்பிட்டும்,
விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது.  இந்தாண்டு முதல் முறையாக தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டது.பல மாவட்டத்தில் இருந்துநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பெரியகுளம் செம்மண்குளி சேர்ந்தவழக்கறிஞர்பாலுமகேந்திரன்.புதியவன்.தமிழ்நாடு பிரஸ் கிளப் மாநில செயலாளரும் தின ஓசை தேனிமாவட்ட செய்தியாளர்.ஏ.சாதிக்பாட்சா.பாலா.வில் வாய்ஸ்  தேனிமாவட்டம் செய்தியாளர். மற்றும்செய்தியாளர்கள் ஏராளமான,நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!