தமிழகம்

ஒசூரில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

269views
ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா மிதிவண்டி ( Cycle ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் இரா.தேவசேனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பாளராக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ் MLA, மாண்புமிகு மேயர் S.A.சத்யா, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் N.S.மாதேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினர்.

விழாவில் பேசிய பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் ” நிதி ” ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார், உடனடியாக பரிசீலனை செய்வதாக பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் தாமாகவே முன்வந்து பள்ளிக்கு தேவையான நாற்காலி , மேசைகளை வழங்குவதாக அறிவிப்பு செய்தார்.

செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!