தமிழகம்

கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு

47views
நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தாரிகா ஸ்ரீ என்பவர் 566/600 மதிப்பெண்கள் எடுத்ததை பாராட்டும் விதமாக, கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தி ருபாய் ஐயாயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிகழ்வில் கெங்கவல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு .மணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகவேல் ஆசிரியர், கவுன்சிலர்கள் அருண்குமார் ,சையது மற்றும் பாலசுப்ரமணியம், செல்வகிளிண்டன், ராஜேந்திரன் ,வெங்கட், மணி, மனோஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!