தமிழகம்

காட்பாடி அருகே நெற்பயிருக்கு விவசாயி தீவைப்பு – இழப்பீடு தராததால் ஆத்திரம்

35views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கொண்டாரெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார்(40) தன்னுடைய 4 ஏக்கரில் நெல் பயிர்செய்து இருந்தார்.  மழை காரணமாக நெற்கதிர்கள் சேதமடைந்தன.  நஷ்டஈடு கேட்டு வேளாண்துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் பயிர்காப்பீடு செய்யாத காரணத்தினால் பணம் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சிவக்குமார் தனது நிலத்தில் உள்ள நெற்கதிர்களை தீயிட்டு கொளுத்தினார்.  மழை விட்டு, விட்டு பெய்துகொண்டு இருந்த காரணத்தினால் முழுமையாக எரியவில்லை.  விவசாயி தான் விளைய வைத்த நெற்கதிர்களை கொளுத்தியது, தான் குடியிருக்கும் வீட்டை கொளுத்தியதற்கு சமம், விவசாயிகள் மாற்றுவழியையோசிக்க வேண்டும்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!