தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

37views
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு இடையூறாக லாரி கனரக வாகனம் நிறுத்தி உள்ளனர். இதனால் சமூக விரோதிகள்நடமாட்டம் அதிகமாக உள்ளது பெண்கள் ஆண்கள் அனைவரும் ஒரு அச்சத்துடன் வந்து செல்கிறார்கள் இதை பெரியகுளம் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை அதேசமயம் பயணிகளுக்கு அமர்வதற்கு சேர்கள் சேதம் அடைந்து உள்ளது பொதுமக்களின் குடி தண்ணீர் கிடப்பதில்லை பயணிகள்பேருந்தை விட்டு இறங்கியதும் தண்ணீர் குடிப்பதற்காக டேங்க் அருகே போவார்கள். தண்ணீர் டேங்க்கில் திருகு குழாயும் இல்லை. டேங்க்கில் தண்ணீரும் கிடையாது. பயணிகள் கடைக்கு காசுக் கொடுத்து வாங்கும் நிலைமைக்கு பெரியகுளம் நகராட்சி மெத்தனப்போக்காக உள்ளனர்.

பலமுறை நகராட்சி ஆணையாளரிடம் சொல்லியும் எந்த ஒரு பயனும் இல்லை. இதை கண்டு நகராட்சியும் மாவட்ட ஆட்சியாரும் நடவடிக்கை எடுப்பார்களா ? பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!