தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

36views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (35). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
வழக்குபதிவு செய்த போலீசார் மாடசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி மாடசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!