மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ள மெயின் ரோட்டில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் ஊராட்சி மன்ற தலைவரோ ஊராட்சி செயலாளரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்றும், ஊராட்சி மன்றம் சார்பாக தினசரி வீடுகளுக்கு குப்பை வாங்க வருபவர்கள் வராத காரணத்தால் இந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகையால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளி பெண்கள் சுகாதார வளாகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்.
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.