தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

66views

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்திருந்தார். தென்காசி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் காரில், ராஜபாளையம் வழியாக மதுரைக்கு சென்றார்.
முதல்வருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலினுக்கு,  திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீரெங்கமன்னார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு ஆண்டாள் சூடிய மாலை, கிளி, சுவாமி படம் மற்றும் பிரசாதங்களை பட்டர்கள் வழங்கினர். பின்னர் ஆண்டாள் அவதரித்த நந்தவனம், பெரியபெருமாள் சந்நிதி ஆகியவற்றில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சிறப்புகள் பராம்பரியம் குறித்து கோயில் பட்டர்களிடம் ஆர்வமுடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!