தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சிறப்பாக பணிபுரியும் டி.எஸ்.பி. தீபா

222views
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணிபு|ரிநது வருபவர் டி.எஸ்.பி. தீபா. இளம் வயது காவல்துறை அதிகாரியான, இவரின் சிறப்பான செயல்பாடுகளால், சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது. சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்த அவலநிலை தற்போது மாறி, இயல்பான, நல்ல, அமைதியான சூழல் நிலவுகிறது.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வழித்தடங்களில், சிரமமின்றி, நல்ல நிலை யில், சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்,108 அவசர ஆம்புலன்ஸ்களும், போக்குவரத்து நெரிசலின்றி, நிம்மதியாக, சென்று வருவதற்கு வழிவகை செய்துள்ளார். நகரில் கொள்ளை, திருட்டுச்சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துளன. இரவு ரோந்துப்பணிகளை அதிகரித்துள்ளார்.
பொதுமக்களும், வணிகர்களும் அச்சமின்றி, இருந்து வருகின்றனர். உண்மைநிலையினை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் வழங்குவதில் தனது தலையாய கடமையாக ஆற்றி, வருகிறார். துணிவுடன், நேர்மையுடன், உண்மையுடன் பொதுமக்கள் நலனில் அக்கறையுடன், சிறப்பாக செயல்படுகின்ற பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தீபாவை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!