தமிழகம்

திருவில்லிபுத்தூரில், வெறிநாய் கடித்து 20 பேர் காயம்

74views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் நாய்கள் ஓடித்திரிவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக மாதாநகர், மாலைப்பட்டி பகுதியில் நாய்களின் தொல்லை மிக அதிகமாக உள்ளது. தெருநாய்களில் சில நாய்களுக்கு தடுப்பூசி போடாததால் வெறி பிடித்துள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை வெறிநாய்கள் கடிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று இந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று 20க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.
நாய்க்கடிபட்டவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு சிகிச்சை பெற்றனர். திருவில்லிபுத்தூர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!