தமிழகம்

மதுரை செல்லூர் கனகவேல் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் இருப்பதால் மக்கள் சாலை மறியல்

94views
மதுரை 4வது வார்டுக்கு உட்பட்ட ஆபீஸ்சர்ஸ் டவுன்,கனகவேல் நகர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் தேங்கியுள்ள மழை நீரில் கழிவு நீரும் சேர்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும்,பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்லூர் பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!