தமிழகம்

ஆற்றில் அடித்து வரப்பட்ட அடையாளம் தெரியாத வாலிபர் பிரேதம்

248views
மதுரை வைகை ஒட்டியுள்ள ராமராயர் மண்டகப்படி எதிரே உள்ள கரை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக மதிச்சியம் காவல்துறைக்கும் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் ஆற்றின் கரை ஓரத்தில் ஒதுங்கி இருந்த ஆண் பிரேதத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் கடந்த சில நாட்களாக வைகை ஆற்றில் நீர்வர்த்தனது அதிக அளவில் இருந்தது தற்பொழுது நீர் வரத்து குறைந்ததால் அடர்ந்த செடி பகுதிகளில் பிரேதம் மாட்டிக்கொண்டதால் மேலே மிதக்க தொடங்கியது
மேலும் இவர் யார் எந்தப் பகுதியை சேர்ந்தவர் குளிக்கும் போது தவறி விழுந்தாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா எந்த ஊரை சேர்ந்தவர் என மதிசியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதிகாலை நேரத்தில் ஆண் பிரேதம் ஒன்று ஆற்றின் ஓரத்தில் மிகுந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ந்து போனார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!