தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

72views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மலைத் தொடர்ச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வத்திராயிருப்பு அருகேயுள்ள, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மிகவும் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் அணைக்கு 9 அடி தண்ணீர் வந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வத்திராயிருப்பு சுற்றியுள்ள கண்மாய்களிலும் தண்ணீர் பெருகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தப்பகுதியில் விவசாயம் செழிப்பாக நடைபெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!