தமிழகம்

வேலூர் பகுதியில் மழை, ஆங்காங்கே மழைநீர்தேக்கம்

45views
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்துவருகிறது. தற்போது மழையின் அளவு குறையவில்லை.  வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடி தாலுகா பொன்னையில் 36.60 மி.மீ, வேலூரில் 36.50 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கி பல இடங்களில் நீர் வெளியேராமல் தேங்கி உள்ளது. மழையில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. உயிர்சேதம் மற்றும் கால்நடை ஏதும் (காலை 8 மணி வரை) இல்லை என்று வருவாய்துறை கூறியுள்ளது. மின்தடை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!