தமிழகம்

குற்றம்

68views
மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த தற்கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
புதூர் அழகர் கோவில் மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் போது நடந்து சென்ற முதியவர் பலியானார். கே. புதூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் நகர் தெற்கு நான்காவது தெருவை சேர்ந்தவர் சித்திரவேலு 77. இவர் அழகர் கோவில் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் போது மயங்கி கிடந்தார் .
அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி விறகு மண்டி அருகே ஓடும் வேனில் குதித்து வாலிபர் தற்கொலை யார் அவர் போலீஸ் விசாரணை
மாட்டுத்தாவணி‌விறகுமண்டி அருகே அருகே ஓடும் வேனில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் .யார் இவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் தென்றல் நகரை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம் 53. இவர் வேன் டிரைவர் ஆவார். மதுரைக்கு வேனை ஒட்டி வந்தார். மாட்டுத்தாவணி அருகே சென்றபோது திடீரென்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பின்பகுதியில் குதித்து சிக்கிக்கொண்டார். இதில் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசிங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து வேன் டிரைவர் ஜோதிராமலிங்கம் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லிஸ் நகரில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
எல்லிஸ் நகர் சர்வோதயா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கணேசன் 29. இவருக்கு கடந்த நான்கு நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவதியுற்ற நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி நந்தினி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு யார் அவர் போலீஸ் விசாரணை.
நெல் பேட்டை அருகே உள்ள பகுதியில் வைகை ஆற்றில் அழகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த தகவல் மதுரை கிழக்கு வி.ஏ.ஓவுக்கு தெரிவிக்கப்பட்டது . விஏஓ சுருளி ஆண்டவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.அவர் இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் கொலை செய்யப்பட்டாரா அல்லது நீச்சல் தெரியாமல் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிச்சியத்தில் இ சேவை மைய ஊழியர் மீது தாக்குதல் – வாலிபர் கைது
மதிச்சியத்தில் இ சேவை மைய ஊழியர் மீது தாக்கல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பாராளுமன்றத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார் மகன் சதீஷ்குமார் 43 .இவர் செனாய நகர் கக்கன் தெருவில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இங்கு வந்த தினேஷ்குமார் என்பவர் திருமண ஆகவில்லை என்ற சான்று விண்ணப்பித்து பெற்றார். அதற்கான கட்டணத்தை சதீஷ்குமார் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குமார் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார் .இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரில் மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய தினேஷ் குமாரை கைது செய்தனர்.
கே புதூர் 120 அடி சாலையில் கத்தி முனையில் பணம் செல் போன் பறிப்பு.
கே புதூர் எஸ் ஆர் என் நகரச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பரந்தாமன் 20. இவர் 120 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரை வழிமுறைத்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும் பணம் ரூ500ஐயும் வழிப்பறிசெய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பரந்தாமன் கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!