தமிழகம்

சாத்தூர் அருகே, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

44views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில், உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து வெம்பக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் தலைமையில் போலீசார், வெம்பக்கோட்டை மற்றும் விளாமரத்துப்பட்டி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். விளாமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசார் விசாரணையில், பிடிபட்ட இரண்டு பேரும் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதன் (40), விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (30) என்றும், இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. உரிய அனுமதி இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 கிலோ மூலப் பொருட்கள், 20 கிலோ சரவெடிகள் மற்றும் 10 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!