தமிழகம்

காட்பாடி ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன்

101views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரி அரங்கில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.  தமிழ் சொற்பொழிவாளரும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன், பெண்மை போற்றுவது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பின்பு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பல்வேறு தமிழ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், ஆதிதிராவிட நல அலுவலர் ராமச்சந்திரன், ஆக்கிலியம் கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி, வேலூர் மாவட்ட வி. சி.க.செயலாளர் பிலிப் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!