தமிழகம்

மதுரை விமான நிலையம் அருகே தமிழக முதல்வர் திறந்து வைத்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய விசிகவினர்; கட்சிக் கொடியுடன் மாலை அணிவிக்க மறுத்ததை எதிர்பு தெரிவித்த காவல்துறையினரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது

129views
மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் விசிக சார்பாக 45 லட்சம் மதிப்பீட்டில் 13 அடிக்கு அம்பேத்கருக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது.  அதை காலை 10.20 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட பாஜகவினர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சிலை அருகில் திரளாக இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தி பாஜக கொடி இல்லாமல் மாலையணிவிக்க செல்ல வேண்டும் என்று சொன்னதை அடுத்து இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு பாஜகவின்ரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பாஜகவினர் நாங்கள் கட்சி கொடி இல்லாமல் மாலை அணிவித்து மரியாதை செய்து கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டனர் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு நாளை தனியாக இதற்காக நேரம் ஒதுக்கி தருவதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பாஜகவினர் இன்றே அனுமதி வழக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் பாஜகவின் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்ட 25 பேரை கைது செய்து தனியார் மஹாலில் வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!