தமிழகம்

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மதுரை தனியார் ஓட்டலில் வகை,வகையான உணவு விருந்து – நடனம், மேஜிக் பரிசு என குழந்தைகளை உற்சாகப்படுத்திய நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

133views
ஜவகர்லால் நேரு பிந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் (பாப்பிஸ் ஹோட்டலில்) தேசிய குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தினமான இன்று ஹோட்டலுக்கு குழந்தைகளுடன் வந்த வாடிக்கையாளர்களை ரோஜாப் பூ கொடுத்து வரவேற்றதோடு, குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டன.
மேலும் குழந்தைகளுக்கு பிடித்த கேக்குகள், இனிப்புகள், பழங்களும் இலவசமாக கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து மிக்கி மோஸ், சோட்டா பீம் பொம்மைகளை போல வேடமணிந்தவர்கள் குழந்தைகளுடன் நடனம் ஆடி மகிழ்ச்சிப்படுத்தினர்.
மேலும் பல்வேறு வகையான பரிசுகள் கொடுத்தும், மேஜிக் செய்து காண்பித்தும், குழந்தைகளோடு உணவகத்தினர் நடனமாடியும் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
அதோடு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் பல்வேறு வகையான உணவு வகைகளை  வரிசைப்படுத்தி வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை எடுத்து சாப்பிட வைத்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வி காளமேக ம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!