தமிழகம்

ராமநாதபுரம் அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப்போட்டி

67views
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கு 3 பிரிவுகளாக ஓவியப்போட்டி நடந்தது. 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் போட்டியில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி வே. பிரதிக்ஷா, ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி க. ரிமி தரிஷி, சேதுபதி நடுநிலைப்பள்ளி  8 ஆம் வகுப்பு மாணவர் க. காளீஸ்வரன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வன உயிரினங்கள் போட்டியில் டி.டி.விநாயகர் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் பி.ஹரிஸ்மா, கே.அபிநயா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் மாணவர் மு. திருமுருகன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி பா.விஷாலி சிறப்பு பரிசு வென்றார்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர் போட்டியில் டி.டி.விநாயகர் சுவார்ட்ஸ், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் கே.அரிபாஸ்கரன், நா.சந்தோஷ், ஜி.ஜெகதீசன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ். வெங்கடாசலபதி பரிசு, சான்றிதழ் வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் வி.சிவக்குமார் பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். இளநிலை உதவியாளர் ஏ.பாலமுருகன், ஓவியர் ஜி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!