தமிழகம்

செல்லம்பட்டியில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

105views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் மத்திய அரசின் எம்எஸ்எம்இ புரோமோசன் கவுன்சில் சேர்மன் முத்துராமன் தலைமையில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதாராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் செல்லம்பட்டி பகுதியை சுற்றியுள்ள மகளிர் சுய உதவி குழு பெண்கள், இளைஞர்களுக்கு கலந்து கொண்ட நிலையில் சிறு குறு தொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் செல்லம்பட்டி துணைசேர்மன் மணிகண்டன், ஆரியபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர்,மாவட்ட வள பயிற்றுநர் அழகுமண்ணன், வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!