செய்திகள்

இந்தியாசெய்திகள்

கேரளா: தாமதமாகும் தென்மேற்கு பருவமழை… ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மழை பொழிவு கொண்ட தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே மழை தொடங்க வாய்ப்பில்லை...
இந்தியாசெய்திகள்

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரும் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் மனுதாரர், அரசு தரப்பில் வாதங்கள் மு டிந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நிரன்பாய் படேல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர். கடந்த ஆண்டு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதம்.. கொளுத்தும் வெப்பத்தால் மக்கள் அவதி!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்தாலும் கோடை வெயில் கடுமையாக மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும் அவர்களை வெயில் விடுவதாக இல்லை. கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து...
செய்திகள்தமிழகம்

ரயில், விமான பயணிகளுக்கு நாளை முதல் இ-பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாவட்டங்களுக்கு செல்வதற்கும் சென்னையில் உள்ள பகுதியில் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது வீட்டில் இருந்து ரயில் மற்றும் விமான நிலையத்திற்கு செல்வதற்கும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாளை முதல் அதாவது ஜூன் 1-ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து விமான நிலையம் அல்லது...
செய்திகள்தமிழகம்

இன்று முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. ஊரடங்கில் சிறப்பு ஏற்பாடு !!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது தளர்வில்லா ஊரடங்கு ஜுன் 7வரை நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் தேவையை கருத்தில்கொண்டு நடமாடும் மளிகை கடைகள் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்தது....
இந்தியா

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மே.வங்கம்! மோடியைக் காக்க வைத்த மம்தா

மேற்குவங்கம் மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி ஆய்வு செய்த பின், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மேற்குவங்கம் சென்ற பிரதமரை முறைப்படி, மம்தா பானர்ஜி வரவேற்கச் செல்லவில்லை. ஆளுநர் ஜப்தீப் தங்கர் மட்டுமே விமான நிலையத்திற்குச் சென்று பிரதமரை வரவேற்றார். அதன்பின், மேற்குவங்கத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்து பிரதமர் ஆய்வு...
இந்தியா

அச்சத்தை உருவாக்கும் ராகுல் காந்தி பேச்சு; டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பின்னணியில் இருக்கிறது எனும் உண்மை தெரிந்துவிட்டதால், ராகுல் காந்தியின் பேச்சு மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாக அமைந்துள்ளது. 2021, டிசம்பர் மாதத்துக்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாகப் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் குறித்தும், பிரதமர் மோடியின் திட்டமிடல் இல்லாத செயல்...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… நீட்டிப்பு தேதியை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போழுது மேலும் ஒரு வாரம்...
தமிழகம்

PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து,பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும்,அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்,அதன்படி,புகார் அளிக்க 94447 72222 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர்...
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் எம். ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பிறந்த ஆனந்தகிருஷ்ணன், கிண்டி பொறியியல்...
1 556 557 558 559 560 583
Page 558 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!