பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் தேவை: ஏனென்றால்?- எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி
பள்ளிகளைத் திறப்பதில் நாம் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கற்றல் பாதிப்பைக் குறைக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் மட்டும்...