ஐஆர்சிடிசி சார்பில் ஆக.29-ல் மதுரையில் இருந்து உலகின் உயரமான படேல் சிலைக்கு சுற்றுலா ரயில்: தமிழகத்தில் இருந்து முதல்முறையாக இயக்கப்படுகிறது
தமிழகத்தில் இருந்து முதல்முறையாக, குஜராத்தில் உள்ள உலகின் உயரமான படேல் சிலைக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் ஏரிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள், சென்னையில் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. நீண்டநாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களும் வெளியூர்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி...