ஆப்கானிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், தலிபான்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் வலுவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'அப்சர்வர் ரிசர்ச்பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை சார்பில் 'இந்திய - அமெரிக்கஉறவும் - 21-ம் நூற்றாண்டின் பாதுகாப்பும்' என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா...