+2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவியதையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து...
