11 பேருக்கு ‘நல்லாசிரியர்’ விருது!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.இதில், மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு தொகையை திருப்பூர் கலெக்டர் வினீத் வழங்கி கவுரவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகராஜன், மகேந்திரன், ராஜகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்:கோ.சுரேஷ், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.ந.தெய்வீகன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, செலாம்பாளையம்.வே.சின்னராசு, பட்டதாரி ஆசிரியர், பாரதி நுாற்றாண்டு...
