இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்: தீமையை நன்மை வெற்றி கொண்டதை கிருஷ்ண ஜெயந்தி விழா குறிக்கிறது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்று பகவத் கீதையில் கிருஷ்ணரால் அருளப்பட்ட அழியாத செய்தி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்த புனிதமான நன்னாளில், சமூக மேம்பாட்டுக்காக கிருஷ்ணர் அருளிய உலகளாவிய போதனைகளை பின்பற்றுவோம் என்று உறுதியேற்போம். இவ்விழா, தமிழகத்தில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு,ஆரோக்கியத்தை தரட்டும். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண பகவான், மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழித்தது போலவே, தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயைஅழிக்க அனைவரும் உறுதியேற்போம். இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி...
