தமிழகம்

தமிழகம்

பயிர் கடன் தள்ளுபடியில் திடீர் திருப்பம்.. அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பயிர் கடன் தள்ளுபடி பொறுத்தவரை 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வாங்க வேண்டிய கடனை விட கடந்த அதிமுக ஆட்சியில் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ. 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 503 கோடி முறைகேடாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம்போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர் கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆறு தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில்...
தமிழகம்

தமிழ்நாட்டில் இந்த 3 கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்..!!

கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில் நீர் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின் மீது முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ''சென்னைக்கான குடிநீருக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பானின் ஜைகா நிதியின் மூலம் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட திட்டத்தை ரூ.6,078 கோடியில் செயல்படுத்த, ஒப்பந்தப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தற்போது சென்னையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேறும்போது, ஏரிகளில் இருந்து நீர் எடுக்காமலேயே 870 மில்லியன் லிட்டரைப் பெற முடியும்'' என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சென்னை நகருக்கு தற்போது தினசரி...
தமிழகம்

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து இன்று முடிவு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து 25-க்கும்மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர் சமுதாயத்துக்காக மட்டும் தேர்தல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம்பிறப்பித்து இருப்பது சட்டவிரோதமானது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள பிறசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கடுமையான பாதிப்பை சந்திக்கநேரிடும்என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், ''இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என வாதிடப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கில்...
செய்திகள்தமிழகம்

மணிப்பூர் ஆளுநராக நியமனம்: சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசிபெற்ற இல.கணேசன்

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், காஞ்சிபுரம் வருகை தந்து சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூர் ஆளுநராக நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பதவியேற்புக்கு முன்பாக காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் இல.கணேசன். ஆசி பெற்றபோது, அவருடன் அவரின் சகோதரர் இல.கோபாலன் உடன் வந்திருந்தார். ஆசி பெற்ற பிறகு கோரிக்கை மணிமண்டபத்தில் உள்ள மகா பெரியவரின் மூலஸ்தானத்திற்கு சென்று தரிசனம் செய்தார் அவர். காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் சுவாமிகளிடம் ஆசி பெற வந்த இல.கணேசனை, சுவாமிகள் 'மனித நேயமிக்க மணிப்பூர் ஆளுநரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்' என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது....
செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஆக.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக கடற்கரையை ஒட்டிநிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக 24-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும். மேலும் 25, 26-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்....
செய்திகள்தமிழகம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில ்இருந்து தமிழகம், கர்நாடக மாநிலங் களுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து திருப்பதி, கடப்பா, சித்தூர், விஜயவாடா, பலமனேர், குப்பம், உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகத்தின் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகமும் பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளன. கர்நாடகா பேருந்துகள்... கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத‌த்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் இரு மாநிலங்களுக்கு...
செய்திகள்தமிழகம்

கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கேரள எல்லையையொட்டி இருப்பதால், கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதே போல் நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு குறையவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் கேரளாவில் தினமும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கலாம். பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி...
செய்திகள்தமிழகம்

நள்ளிரவு முதல் தமிழகம் – கர்நாடகா இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

119 நாட்களுக்குப் பிறகு தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் மாதம் இறுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் 450 பேருந்துகள் இயங்கி வந்தன. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் 250 பேருந்துகள் தமிழகத்திற்கு இயங்கி வந்தன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசு, தமிழகத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என நேற்று அறிவித்தது. இந்நிலையில் 119 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் இருந்து இரு மாநில பேருந்து போக்குவரத்து துவங்கியதால் தினமும் பெங்களூருவிலிருந்து,...
செய்திகள்தமிழகம்

ஒரு வழியாக தமிழகத்தில் பள்ளிகள் செப் 1 முதல் திறப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்போது, வரும் செப்டம்பர் 1ந்தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
1 525 526 527 528 529 556
Page 527 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!