ரூ.1,281 கோடி! நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம்
சென்னையில், நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, கிளை கால்வாய்களை சீரமைக்கவும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை இணைந்து, 1,281 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.சென்னையில், முக்கிய நீர் வழித்தடங்களாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. குப்பை, கழிவு நீர் கலப்பால், இவை சாக்கடை போல் காட்சியளிக்கின்றன. நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.இதில், கூவம் ஆற்றின் கரையோரத்தில் இருந்த, 12 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது, 1,800 குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.அதன்படி, கூவம் கரையோரத்தில் இருந்த, 80 சதவீத குடியிருப்புகள் அகற்றப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன....
