தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான மொஹரம் வரும் ஆகஸ்ட் (20.08.2021) அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்து உள்ளது. மொஹரம் முஸ்லிம்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் மாதமான மொஹரம் மாதத்தின் 10 நாள் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு வைத்து வழிபடுவர். இந்த பண்டிகை தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. முகமதுவின் பேரனான இமாம் ஹுசைன் இஸ்லாமிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக தன் உயிரை ஈர்த்த திருநாள் என்று போற்றப்படுகிறது. இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மொஹரம் மாதத்தின் 10ம் நாள் நோன்பு திறந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த நாளில் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணுவர். மேலும் இந்த நன்னாளில் சமைத்த உணவை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்குவர்....
செய்திகள்தமிழகம்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின்

மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக்‌ கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாஜின்‌ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரியலூர்‌ மாவட்டம்‌, கங்கைகொண்ட சோழபுரத்தில்‌ மாமன்னன்‌ ராஜேந்திர சோழனால்‌ ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்‌ ஆலயம்‌ உலகப்‌ புகழ்‌ வாய்ந்த ஒன்றாகும்‌. முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ காலம்‌ முதல்‌ சோழர்களின்‌ கலை மற்றும்‌ கட்டடக்கலைகளின்‌ அழகிய தொகுப்பாகவும்‌, வாழும்‌ வரலாறாகவும்‌ விளங்குகிறது. அண்மையில்‌, ஐக்கிய நாடுகள்‌ கல்வி, அறிவியல்‌, பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலகப்‌ புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின்‌ சிறப்பினைக்‌ கண்டுகளித்திட உலகின்‌ பல்வேறு நாடுகளிலிருந்தும்‌ சுற்றுலா பயணிகள்‌ வந்து செல்கின்றனர்‌. அரியலூர்‌ மாவட்டத்தின்‌ மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில்‌ மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளை முன்னிட்டு...
செய்திகள்தமிழகம்

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

கொரோனா காரணமாக பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டு வெளியிடுவது சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 26- ஆம் தேதி முதல், விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் மாணவர்கள் சேர்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவும் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று வரையில், சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்பதிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். கூடுதல் காலநீட்டிப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டும் கிட்டதட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது...
செய்திகள்தமிழகம்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல் இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்....
செய்திகள்தமிழகம்

நகரை அழகுபடுத்தும் பணி தீவிரம்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்க மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்துக்கு தீவிர தூய்மைப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அழித்து, அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள்...
செய்திகள்தமிழகம்

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். காவல் துறையினருக்கு சம்பளம் வழங்குதல், உத்தரவு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் காவல் அலுவலக பணியாளர்களான சூப்பிரண்டுகள், டைப்பிஸ்ட்டுகள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள் ஆகிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு...
செய்திகள்தமிழகம்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை.. சனி, ஞாயிறு கிழமைகளில்.. கோவிலுக்கு செல்ல தடை.!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

20 ஆண்டுகளில் எதுக்கு எவ்வளவு கடன்.. வெள்ளை அறிக்கை இன்று வெளியீடும் அமைச்சர் !!

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்து இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார்....
செய்திகள்தமிழகம்

தலைவர்களின் சிலைகளுக்கு போடப்பட்டுள்ள கூண்டை அகற்ற வீரமணி வேண்டுகோள்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்து, அவர்களை சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கோ, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் அரசுக்கோ பெருமையாகாது. அதிலும், அண்மைக்காலம் வரைதிறந்த சிலைகளாக இருந்த பெரியார்சிலைகளுக்கும்கூட, கடந்த ஆட்சியில் சில விஷமிகளின் செயல்களைத் தடுக்க சரியான வழி என்று கருதி, கூண்டு போட்டனர். எப்போதோ, எங்கோ நடந்த அசம்பாவிதங்களுக்கு, இது சரியான மாற்று வழி அல்ல. மாறாக, கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தலாம். அதனால் குற்றங்களும் குறைய வாய்ப்பு ஏற்படும். எனவே, தலைவர்கள் அனைவருக்கும் 75-ம் ஆண்டு விடுதலை நாளில், கூண்டுகளை அகற்றி, சுதந்திரமாக காட்சியளிக்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தாக்கத்துக்குப் பிறகுபயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போன்று மாநகர பேருந்துகளில் பயணிகள் வருகை இல்லை. பேருந்துகளில் நகை, செல்போன் உள்ளிட்டவை திருட்டு போனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் மூலம் புகார் கொடுக்க நடத்துநர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தினோம். இருப்பினும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம்...
1 470 471 472 473 474 498
Page 472 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!