தமிழகம்

தமிழகம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தந்ததாக வழக்கு – அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை, 2017 ஏப்.16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அமலாக்கத் துறையினர் தினகரனிடம் விசாரணை நடத்தியபோது, ''சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தற்போது ஜாமீனில் இருக்கிறார். இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2...
தமிழகம்

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,300 கோடியில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.2,300 கோடி செலவில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபோது அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 150 கி.மீ. சாலைகள் 4 வழித் தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் 2 வழித்தடமாகவும் ரூ.2,300 கோடிமதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ரூ.485 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி ரூ.322 கோடி செலவிலும், பாடி...
தமிழகம்

மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று இதுகுறித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, அதை2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓர் அறிவிப்பை...
தமிழகம்

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அதே துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்த மாணவர்கள், துறையின் Co-Guides மற்றும் பேராசிரியர் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்ததாக மாணவி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்....
தமிழகம்

தூத்துக்குடிக்கு 4,000 டன் நிலக்கரி வருகை; மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்ததை அடுத்து மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது. இதையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.  ...
தமிழகம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலானது. சரியாக காலை 10 மணியளவில் மேயர் ஆர்.பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன்முறையாக சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. அண்மையில் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது என்பதால், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. முன்னதாக சொத்து வரி உயர்வு குறித்து பேச அனுமதி கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட்...
தமிழகம்

சசிகலா வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு. சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வேறொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திடீரென விடுமுறையில் சென்றதால் வேறு ஒருநாளில் தீர்ப்பு வழங்கபடுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலா விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி விடுமுறை என்பதால் தீர்ப்புக்கான தேதியை பின்னர் அறிவிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவிலியிருந்து தன்னை நீக்கிய பொது குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சசிகலா வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

ரூ.70 கோடி மதிப்பில் அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவமனை சேவை

தமிழ்நாடு முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்' இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஐந்து பணியாக பணியாளர்களுக்கு இல்லம் தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கினார். களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகள் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 45 வயதும், அதற்கு மேற்பட்ட உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள்,...
தமிழகம்

”ஒமைக்ரான் XE பாதிப்பு இதுவரை இல்லை”-மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் XE குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒமைக்ரான் XE பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மார்ச் மாதத்தை பொறுத்தவரை நாம் அனுப்பிய அனைத்து சாம்பிளும் ஒமைக்ரான் என்று உறுதி செய்யப்பட்ட போதிலும்...
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில், "மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும். மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு...
1 470 471 472 473 474 545
Page 472 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!