தமிழகம்

தமிழகம்

மன்னார்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? தமிழக அரசுக்கு சீமான் எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான' காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர்...
தமிழகம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. அங்கு, 60-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. அதனை எந்த காலகட்டத்தில் இருந்து தருவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறுவது...
தமிழகம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்?: ‘2ஜி புகழ்’ ராசா கேட்கிறார்

5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி தொகையை விட குறைவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளதாகவும், எஞ்சிய பணம் எங்கே சென்றது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ‛2ஜி' அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா கூறியுள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் ஜியோ' அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்தது. மொத்தமாக 5ஜி ஏலத்தில் நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலம் துவங்குவதற்கு முன்னதாக சுமார் ரூ.4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு...
தமிழகம்

கன மழை எச்சரிக்கையால் ஒரே நாளில் கரை திரும்பிய குமரி மீனவர்கள்

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வளிமண்டல...
தமிழகம்

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு – இன்று விசாரணை

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டியது. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு...
தமிழகம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை வெளுக்கும்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது....
தமிழகம்

கள்ளக்குறிச்சி | பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஜாமீனில் விடுவிக்க, மாணவியின் தாய் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
தமிழகம்

காவல் துறையில் அனைவருக்கும் பதக்கம்: குடியரசுத் தலைவர் கொடி பெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
தமிழகம்

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய...
தமிழகம்

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
1 465 466 467 468 469 545
Page 467 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!