தமிழகம்

தமிழகம்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ரூ.50 கோடியில் நாட்டு மரக்கன்று நடும் திட்டம்: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.50 கோடி செலவில் மண் சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எக்காரணம் கொண்டும்தொழிற்சாலை கழிவுநீரை கடலிலோ, ஆற்றிலோ கலக்கவிடக் கூடாது என்று ஆலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈரோடு, நாமக்கல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 10 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பனைமரங்கள் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அதன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். புதிய பசுமை திட்டங்களை கண்டறியவும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக...
தமிழகம்

எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்லம் மற்றும் அலுவலகம் என சுமார் 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி லாக்கர் சாவியை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று...
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின்னர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர...
தமிழகம்

சிறப்பு வழிகாட்டி குழு… கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிபில், மத்திய அரசின் ஆதரவோடு, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை "அனைவருக்கும் நல்வாழ்வு மையங்கள்" ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 622 தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் நவீன கர்ப்பத்தடை தடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு...
தமிழகம்

இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.. வைகோ கோரிக்கை.!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள், நிகழும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட இருப்பது, மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடி உரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல் அமைச்சர் அறிவித்து இருக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில்...
தமிழகம்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே தேதியில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் நடைபெறுகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல்...
தமிழகம்

சிலைகளுடன் திடீர் போராட்டம் எதிரொலி – தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை

வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளுடன் சிலர் திடீர் போராட்டம் நடத்தியதால், சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக, இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலைகளுடன் போராட்டம் நடத்தினர். தனியார் வாகனங்களில் சிலைகளை எடுத்து வந்து, கலைவாணர் அரங்கம் எதிரே இறங்கி, சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். போலீஸார் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த போராட்டம் நடந்தது. இதுபோல, திடீர் போராட்டங்கள் நடக்கவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். குறிப்பாக கலைவாணர் அரங்கத்தைச்...
தமிழகம்

செப்டம்பர் இறுதிக்குள் காவிரியில் 64.62 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

காவிரியில் கடந்த 3 மாதங்களாக தரப்படாமல் உள்ள நிலுவை நீர் மற்றும் செப்டம்பர் மாதத்தின் பங்கு உள்பட 64.62 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 7 டிஎம்சி தண்ணீரை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்úஸனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் மற்றும் கர்நாடகம் சார்பில் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரியில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்நாடகம் 86 டிஎம்சி...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 முதல்,12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், முதலாம் ஆண்டை தவிர...
தமிழகம்

மேக்கேதாட்டு அணை: தமிழகத்துக்கு உதவுவதாக கேரள முதல்வா் உறுதி-பி.ஆா். பாண்டியன் தகவல்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவுவதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் உறுதி அளித்ததாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் கேரள முதல்வரை பி.ஆா். பாண்டியன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா். இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கா்நாடகாவுக்கு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்ய மோடி அரசு தன் விருப்பத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கா்நாடகம் அனுப்பி வைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கடந்த வாரம் கா்நாடக முதல்வா் பசவராஜ்...
1 465 466 467 468 469 498
Page 467 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!