தமிழகம்

தமிழகம்

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40%-ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக இது 30% என்றிருந்தது. மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து, 'அரசுத்துறையிலுள்ள பணியிடங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் ஆகியவற்றில் தமிழக இளைஞர்களே 100 சதவிகிதம் நியமனம் செய்யப்படுவர். அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும். மேலும், அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்' என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, மனித வள மேலாண்மைத்துறையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம்...
தமிழகம்

தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் 4 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 185370 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக அரசு மருத்துவமனைகள் மூலம் 3,79,65,592 பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 2280173...
தமிழகம்

சென்னையில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் லட்சக்கணக்கானோர் பலன்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த, 'மெகா' தடுப்பூசி முகாம்களில், ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது போன்ற, தொடர் முகாம்களின் மூலம், சென்னையில், மிக விரைவில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனா மூன்றாம் அலை பரவலை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் நேற்று 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.சென்னை மாநகராட்சி சார்பில், 1,600 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லுாரிகள், பூங்காக்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கெல்லாம், தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, இணையதள முகவரியும் வழங்கப்பட்டது. மேலும்,...
தமிழகம்

4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

``தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்' என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், பழனி நாடார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த மானிய கோரிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவ்சாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இதுவரை 4,52,777 விவசாயிகள் 18 ஆண்டுகள்...
தமிழகம்

இன்று நீட் தேர்வு.. தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. முதல்முறையாக தமிழில் தேர்வு!

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வானது இன்றைய தினம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பொசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த தேர்வால் தங்கள் மருத்துவ கனவு கலைந்து போனதால் அரியலூர் அனிதா உள்பட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எனவேதான் நீட் தேர்வை உயிரைக் குடிக்கும் அரக்கனாக பார்க்கிறார்கள். உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்! நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு புறம் இருந்தால்...
தமிழகம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ‌‌‌‌‌தமிழகத்தின் சில மாவட்டங்களில், 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் சேலம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல்,...
தமிழகம்

செப்., 11 ‘மகாகவி நாள்’: முதல்வர் அறிவிப்பு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்.,11 அன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்.,11 அன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி,'பாரதி இளங்கவிஞர் விருது' ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வழங்கப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்று புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும் .பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களான மறைந்த பெ.தூரன்,...
தமிழகம்

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என். ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர்...
தமிழகம்

இன்று விநாயகர் சதுர்த்தி – ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: விநாயகர் பிறந்த நாளான இந்நன்னாள், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் மகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்து செல்லும்நாளாகும். கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் விநாயகர் அருள்வார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளமை, அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை கொண்டுவருவதாக விநாயகர் சதுர்த்தி அமையட்டும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விநாயகர் சதுர்த்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும், அதேசமயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வருங்கால முன்னேற்றத்துக்கு வித்திடுவதாகவும் அமையட்டும். கரோனா எனும் சவாலானசூழ்நிலையை தடுப்பூசிகொண்டு எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: ஞானமேவடிவான திருமேனியைக்...
தமிழகம்

கவிஞர் புலமைப்பித்தன் மறைவு

கவிஞர் புலமைப்பித்தன், 85, உடல்நலக் குறைவால் காலமானார்.அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவால், சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று நடக்கின்றன.கோவை மாவட்டம் பள்ளம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த புலமைப்பித்தன், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்., நடித்த குடியிருந்த கோயில் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர். சமீபத்தில் விஜய் நடித்த தெறி படத்திலும் பாடல் எழுதிஇருந்தார்.அ.தி.மு.க., ஆட்சியில் அரசவைக் கவிஞராக, அ.தி.மு.க., அவைத் தலைவராக, சட்டமேலவை துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே இறந்து விட்டனர். மகன் வழி...
1 463 464 465 466 467 498
Page 465 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!